சிவகாசி: காதல் திருமணம் செய்த இளைஞர் வெட்டி படுகொலை - வெளியான அதிர்ச்சி காரணம்! - Seithipunal
Seithipunal


சிவகாசி அருகே காதல் திருமணம் செய்த எட்டு மாதங்களில் புது மாப்பிள்ளை, மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் பாண்டி. 26 வயதாகும் கார்த்திக் பாண்டி சிவகாசி பகுதியில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார். 

அப்போது சிவகாசி அய்யம்பட்டி சேர்ந்த நந்தினி என்ற பெண்ணை காதலித்து, கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் இந்த காதல் திருமணத்தின் போது, நந்தினியின் சகோதரர்கள் மற்றும் குடும்பத்தார் இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

திருமணத்திற்கு பின், நந்தினி அந்த பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனால் இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் தங்களது பணிகளுக்கு சென்று வந்து இருந்துள்ளனர். 

சம்பவம் நடந்த நேற்று இரவு, கார்த்திக் பாண்டி நந்தினியை அழைத்து செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல், கார்த்திக் பாண்டியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியது. 

காதல் மனைவி நந்தினி கண் முன்னாலேயே இரத்த வெள்ளத்தில் கார்த்திக் பாண்டி சம்பவ இடத்திலேயே பலியாகினார். சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் கார்த்திக் பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த கொலை வழக்கில் நந்தினி சகோதரர்கள் பாலமுருகன், தனபாலன் மற்றும் அவருடைய நண்பர் சிவா ஆகிய மூன்று பேரை கைது செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sivakasi Karthik pandiyan hacked to death


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->