சிவகங்கை: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளி கார்த்திக் (28) என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டு, பெத்தனேந்தலைச் சேர்ந்த கார்த்திக், அருகிலுள்ள சிறுமியை வன்கொடுமை செய்து கர்ப்பம் ஏற்படுத்தியதாக புகார் வந்ததையடுத்து, அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது.

விசாரணை முடிவில், நீதிபதி கோகுல்முருகன், வன்கொடுமைக்கும், கர்ப்பமாக்கியதற்கும் தனித்தனியாக 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1,000 வீதம் அபராதம் விதித்து, தண்டனைகள் ஒரே நேரத்தில் செயல்பட உத்தரவிட்டார்.

அத்துடன், சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் தனலெட்சுமி வாதாடினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sivagangai Abuse case judgement


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->