விராலிமலை: ஆம்னி பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து!
28 passengers in hospital Omni bus car accident Viralimalai.
விராலிமலை அருகே ஆம்னி பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 28 பேர் காயமடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இருந்து 43 பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, நேற்று (அக்.25) இரவு சென்னை நோக்கி பயணம் செய்தது. பேருந்தை தேனி மாவட்டம் கம்பம் புதுப்பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்த முகமது அன்சாரி (38) ஓட்டிச் சென்றார்.
இந்நிலையில், பேருந்து விராலிமலை–திருச்சி தேசிய நெடுஞ்சாலை பூதகுடி சுங்கச்சாவடி அருகே மேட்டுப்பட்டி பகுதியை நள்ளிரவு கடக்கும் போது எதிர்புறத்தில் தவறான பாதையில் வேகமாக வந்த கார் பேருந்தை மோதியது. காரை திருச்சி பொன் நகர், நியூ செல்வன் நகர் மாரியம்மன் அவென்யுவைச் சேர்ந்த பரத் குமார் (27) ஓட்டிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
அந்த மோதல் மிகுந்த தாக்கத்துடன் நடந்ததால், கார் முற்றிலும் நொறுங்கி, பேருந்தின் முன்பகுதியும் சேதமடைந்தது. இதில், கார் மற்றும் பேருந்தில் இருந்த மொத்தம் 28 பயணிகள் பலத்த மற்றும் லேசான காயங்களுடன் படுகாயமடைந்தனர்.
அப்பகுதியினர் விரைவாக மீட்பு பணியில் ஈடுபட்டு, காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி, விராலிமலை மற்றும் மணப்பாறை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பினர்.
விபத்து காரணமாக சாலையில் போக்குவரத்து சில நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் விராலிமலை போலீசார் கிரேன் மூலம் பேருந்தும் காரையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீராக்கினர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேருந்து மற்றும் கார் ஓட்டுநர்களின் அலட்சியம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
28 passengers in hospital Omni bus car accident Viralimalai.