ரெயில் நிலையத்தில் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்து நகை பறித்த அதிர்ச்சி சம்பவம்!
Shocking incident woman being robbed her jewelry after being talked into it train station
சென்னை பெருங்குடி ரெயில் நிலையத்தில் தனியாக உட்கார்ந்து இருந்த பெண்ணிடம் இளைஞர் ஒருவர் நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை தற்போது ஏற்படுத்தியது.

இந்தநிலையில், நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை காவலர்கள் கைது செய்தனர்.மேலும், காவலர்கள் நடத்திய தீவிர விசாரணையில், அவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 'பாபாஜி' என்கிற 28 வயதான சௌந்தர் என்பது தெரிய வந்துள்ளது.
இதில் கைது செய்யப்பட்ட சௌந்தர் மீது ஏற்கனவே,மறைமலைநகர் காவல் நிலையத்தில் செல்போன் பறிப்பு வழக்குள்ளது.அதுமட்டுமின்றி,மதிய வேளையில் தனியாக இருந்ததால் பேச்சு கொடுத்து பெண்ணிடம் கைவரிசை காட்டியதாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
English Summary
Shocking incident woman being robbed her jewelry after being talked into it train station