ரெயின் கோட் அணிந்து வந்த பெண்… அரிவாளால் வெட்டி 7½ பவுன் தங்கச் செயின் பறித்த அதிர்ச்சி சம்பவம்...!
Shocking incident where woman wearing raincoat hacked death sickle and 7and half pound gold chain snatched away
நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கொள்ளைச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகிலுள்ள தெற்கு தெருவைச் சேர்ந்த பொன்ராஜின் மனைவி தனஸ் (23) வீட்டில் தனியாக இருந்தபோது, திட்டமிட்டு நடந்த தாக்குதலில் நகை பறிக்கப்பட்டது.

சேரன்மகாதேவியில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் வேலைக்கு சென்றிருந்த கணவர் இல்லாத நேரத்தில், நேற்று காலை தனஸ் வீட்டில் ஒருவராக இருந்தார். அப்போது rain coat அணிந்து சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு பெண் திடீரென அவரது முகத்தை துணியால் மூடி, கழுத்தில் இருந்த 7½ பவுன் தங்கச் செயினை பறிக்க முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தனஸ் எதிர்த்து போராடியபோதும், அந்த பெண் அரிவாளால் தலையில் வெட்டி தாக்கி, செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். மேலும், பறிக்கப்பட்ட நகையின் மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு காவல்துறை களக்காடு காவலில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையில், இந்த செயலில் ஈடுபட்டது அண்டை வீட்டைச் சேர்ந்த பால்ராஜின் மனைவி பொன்செல்வி (36) என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளதால், காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Shocking incident where woman wearing raincoat hacked death sickle and 7and half pound gold chain snatched away