பதப்பதைக்கும் சம்பவம்! விதை தொண்டையில் சிக்கியதால் உயிரிழந்த சிறுவன்...! - Seithipunal
Seithipunal


நெல்லையில் மேலப்பாளையம் வடக்கு தைக்கா தெரு பகுதியை சேர்ந்தவர் 35 வயதான நிஜாம் என்பவர். இவருக்கு மனைவி மற்றும் 5 வயதில் 'ரியாஸ்' என்ற மகன் உள்ளார்.இதில் நிஜாம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அவரது பெற்றோர் வீட்டில் நிஜாமின் மனைவி தனது மகனுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சிறுவன் ரியாசுக்கு நேற்று இரவு அவனது தாத்தா பாட்டி ரம்புட்டான் பழத்தை சாப்பிடுவதற்காக ஆசையுடன் வாங்கிக் கொடுத்துள்ளனர். உடனே அந்த சிறுவன் ரியாசும் அந்த பழத்தை வாங்கி சாப்பிட்டுள்ளான்.அப்போது பழத்தை எடுத்து விழுங்கிய சிறுவனுக்கு சிறிது நேரத்தில் அதன் விதை தொண்டையில் சிக்கி கொண்டது.

இதனால் சிறுவன் மூச்சுத்திணறி துடித்துள்ளான்.இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவனது தாத்தாவும், பாட்டியும் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு ரியாசை கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.இச்சம்பவம் தொடர்பாக மேலப்பாளையம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே, மகன் இறந்த தகவலை கேள்விப் பட்டு அவரது தந்தை கதறி துடித்தார். தற்போது அவர் வெளிநாட்டிலிருந்து நெல்லைக்கு புறப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

shocking incident boy died after a seed got stuck in his throat


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->