இயலாதோரிடம் பகிர்ந்து உண்ணு..ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்!  - Seithipunal
Seithipunal


ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற மக்கள் நற்பணி இயக்கம் சார்பாக காமராஜர் நகர் தொகுதிக்கு உட்பட்ட 45 அடி சாலையில்   சுமார் 600 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

பசித்தோர் முகத்தைப் பார்த்திருப்பது பாவம் என்று வள்ளலார் பெருமான் கூறியது போல், ஒரு மனிதன் வாழ்வில் அத்தியாவசிய அவசியம் என்று இரண்டு உண்டு, அதில் அத்தியாவசிய என்பது மனிதன் உயிர் வாழ தேவையான 1)மூன்று வேலை தண்ணீர் உடன் கூடிய உணவு2)நல்ல உறக்கம் 3)உடுத்துவதற்கு துணி என்பதாகும். 

ஆடம்பரம் என்பது கார், செல்போன், சொத்து, நகை, இடம், பணம், பெயர், புகழ் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவை அனைத்தும் மனிதர்களை பொறுத்து மாறுபடும். பந்தியில் இருப்பவருக்கு ஒவ்வொன்றையும் கேட்டு கொடு...

பசியோடு இருப்பவர்களுக்கு எதையும் கேட்காமல் கொடு என்று சொல்வார்கள். உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் உணவும் என்பதையே பிரதானமாக உண்டு வாழ்கின்றனர். தினம் தோறும் வீட்டில் சமைக்கப்படும் உணவை வீணாக்காமல் அதை இயலாதோரிடம் பகிர்ந்து உண்ணுவதே சிறப்பாகும். அப்படி ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் மக்கள் நற்பணி இயக்கம் சார்பில் வாரந்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது.


 
அந்தவகையில் வாரம்தோறும்  காமராஜர் நகர் தொகுதிக்கு உட்பட்ட 45 அடி சாலை மகாராஜா மண்டபம் அருகில் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் மக்கள் நற்பணி இயக்கம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது வருகிறது. அது போல் இன்று சுமார் 600 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் இயக்கத்தின் தலைவர் மறுபக்கம் செய்தியாளர் திரு.முனியன் அவர்கள் முன்னிலையில்,கெளரவ தலைவர் ஆதிதிராவிடர் நலத்துறை கண்காணிப்பாளர் திரு.வேல்முருகன் லெபாஸ்(எ)காந்த் அவர்கள் தலைமையில், இயக்கத்தின் மற்றொரு கெளரவ தலைவர் சிவனடியார் ஐயா திரு.செல்வம், இயக்கத்தின் பொறுப்பாளர்கள்  திருமதி.கவிதா, திருமதி.பிரேமா, திரு.DGM.வசந்த், திரு.DG.கணேஷ், திரு.சிவகுமார், திரு.நாகராஜ், மற்றும் பலர் உடனிருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Share and eat with the less fortunate one can see God in the smile of the poor


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->