சிறைபிடிக்கப்பட்ட கிரெட்டா தன்பெர்க் சொந்த நாட்டுக்கு கிளம்பினார்!
Imprisoned Greta Thunberg has left for her home country
கிரேட்டா தன்பர்க்கை, அவரது சொந்த நாடானா ஸ்வீடனுக்கு இஸ்ரேல் அனுப்பி வைத்துள்ளது. பிரான்ஸ்க்கு அவர் விமானத்தில் ஏற்றி விட்டுள்ளனர்.அவர் பிரான்ஸ் சென்று அங்கிருந்து ஸ்வீடன் செல்கிறார்.
கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக இஸ்ரேல்-காசா இடையே போர் நடைபெற்றுவருகிறது.இந்த போரில் இதுவரை 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் தங்களது உடமைகளையும் ,வீடுகளை இழந்து நிர்க்கதியாக நிற்கின்றனர்.இந்தநிலையில் ஆதரவற்று தவிக்கும் காசா மக்களுக்கு இஸ்ரேல் வழியாக நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்தநிலையில் சுவீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க்கும் காசாவுக்கு நிவாரண பொருட்கள் வழங்க முடிவு செய்து , இத்தாலியின் சிசிலி தீவில் இருந்து ஒரு சரக்கு கப்பலில் நிவாரண பொருட்கள் கொண்டுசெல்லப்பட்டன. அப்போது இஸ்ரேல் கடற்பகுதிக்குள் கப்பல் நுழைந்தபோது அந்த கப்பலை இஸ்ரேல் கடற்படையினர் இடைமறித்து கிரெட்டா தன்பெர்க், பிரான்ஸ் எம்.பி. ரிமா ஹசன் உள்பட 12 பேரை சிறைபிடித்தனர்.
கப்பலை கைப்பற்றிய இஸ்ரேல், அதில் உள்ள பயணிகள் காசாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் கிரேட்டா தன்பர்க்கை, அவரது சொந்த நாடானா ஸ்வீடனுக்கு இஸ்ரேல் அனுப்பி வைத்துள்ளது. பிரான்ஸ்க்கு அவர் விமானத்தில் ஏற்றி விட்டுள்ளனர்.அவர் பிரான்ஸ் சென்று அங்கிருந்து ஸ்வீடன் செல்கிறார்.தடுத்து நிறுத்தப்பட்டுள்ள மற்ற ஆர்வலர்களையும் விடுவிக்க வேண்டும் என தன்பர்க் வலியுறுத்தியுள்ளார். மேலும், தடுத்து நிறுத்தியபோது குழப்பமான, நிச்சயமற்ற சூழ்நிலை உருவானது எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Imprisoned Greta Thunberg has left for her home country