ராணுவ வீரர்களை கொன்ற 9 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை..சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு!  - Seithipunal
Seithipunal


ஈரானில்  ராணுவ வீரர்கள் போல வேடமிட்டு ராணுவ வீரர்களை கொன்ற 9 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்காசிய நாடான ஈரானில் கடந்த 2018-ம் ஆண்டு ராணுவ வீரர்கள் போல வேடமிட்டு ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஊடுருவி ராணுவ வீரர்களை குறிவைத்து  நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ராணுவ வீரர்களும் பயங்கரவாதிகள் சிலரை கொன்றனர். மேலும் பலர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த துப்பாக்கி, வெடிகுண்டு போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.இந்தநிலையில் இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பயங்கரவாதிகள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. எனவே அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி ஈரான் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.உடனடியாக மரண தண்டனையும் நிறைவேற்றப்படுகிறது.இது ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க அங்கு பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது.

ஈரானில் ஐ.எஸ்., அல்-கொய்தா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்படுவதுடன் அவர்கள் அப்பாவி மக்களை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர்.இது  அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளதனை கட்டுப்படுத்த பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்படுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகின்றன. அந்தவகையில் இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பயங்கரவாதிகள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. எனவே அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி ஈரான் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

9 ISIS soldiers killed Death penalty for terrorists. Supreme Court verdict


கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!



Advertisement

கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!




Seithipunal
--> -->