தனி மாநிலத் தகுதி ஏன் தேவை? விளக்கம் அளித்து கையெழுத்து பெற்ற பொதுநல அமைப்பினர்!
Why is individual statehood necessary? Public welfare organization members please provide an explanation and sign
புதுச்சேரி கடற்கரைக்கு வரக்கூடிய புதுச்சேரி வாழ் குடிமக்களிடமும், சுற்றுலா பயணிகளிடமும் தனி மாநிலத் தகுதி ஏன் தேவை என்பதை விளக்கி அனைவரிடமும் கையெழுத்து பெற்றனர்.
புதுச்சேரி மாநிலத்துக்கு மாநில அந்தஸ்து வேண்டி மத்திய அரசை வலியுறுத்தி உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் பொதுநல அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றனர், சமீபத்தில் இதற்காக கையெழுத்து இயக்கத்தை தொடங்கினர், மாநில அந்தஸ்து கேட்டு தொடங்கப்பட்ட இந்த கையெழுத்து இயக்கத்தை முதல் கையெழுத்து போட்டு முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் முக்கிய தலைவர்களை சந்தித்து கையெழுத்து பெற்று வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பொதுமக்கள் என அனைத்து மக்களிடமும் கையெழுத்து பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில்மாநிலத் தகுதி வேண்டி கையெழுத்து இயக்கம் கடற்கரை சாலையில் இந்திய தேசிய இளைஞர் முன்னணி சார்பில் நடைபெற்றது. கையெழுத்து இயக்கத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ராமதாசு, தமிழர் களம் அழகர், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் ராஜா, பீ போல்ட் பஷீர் அகமது, ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்வை இந்திய தேசிய இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தாமரைக்கண்ணன் தலைமை தாங்கினார், நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஐசக், மாநில செயலாளர் சரவணன், பிரேம்குமார், மணிபால் பாகூர் தொகுதி தலைவர் இருசப்பன், இணைப் பொருளாளர் மகேந்திரன், வெற்றி மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு கடற்கரைக்கு வரக்கூடிய புதுச்சேரி வாழ் குடிமக்களிடமும், சுற்றுலா பயணிகளிடமும் தனி மாநிலத் தகுதி ஏன் தேவை என்பதை விளக்கி அனைவரிடமும் கையெழுத்து பெற்றனர்.
English Summary
Why is individual statehood necessary? Public welfare organization members please provide an explanation and sign