அகமதாபாத் விமான விபத்து:டேங்க் முழுவதும் எரிபொருள் இருந்ததால் விபத்து...! - Seithipunal
Seithipunal


குஜராத்தில் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம், இன்று மதியம் 1.17 மணிக்கு லண்டன் (Gatwick) புறப்பட்டது.இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. மேலும், விமான நிலையம் அருகேயுள்ள 'மேகானி நகர்' குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து விபத்தாகியுள்ளது.இந்த விமானத்தில் சுமார் 230 பயணிகள் மற்றும் 2 விமானிகள் உள்பட 12 ஊழியர்கள் என 242 பேர் பயணம் செய்துள்ளனர்.

இது அகமதாபாத்- லண்டன் காட்விக் விமானம் AI171 விபத்துக்குள்ளானது என்று விமான நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தற்போது தெரிவித்துள்ளது.இந்நிலையில்,விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787 ரக விமானம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விமானம் புறப்பட்ட சில நிமிடத்திலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கப்போவதை அறிந்து விமானி தகவல் கொடுத்துள்ளார். விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விமானியிடம் இருந்து அபாய அழைப்பு MAYDAY CALL சென்றுள்ளது.

இதில் பயணிகளின் உயிருக்கு ஆபத்துள்ளதாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு லண்டன் விமானத்தை இயக்கிய விமானி தகவல் கொடுத்துள்ளதாகவும், விமானியின் அபாய தகவலையறிந்து காப்பாற்றுவதற்கு முன்னதாகவே விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

டேங்க் முழுவதும் எரிபொருள் இருந்ததால் தான் கீழே விழுந்து பெரும் வெடிவிபத்துக்குள்ளாகியுள்ளது. இதை தொடர்ந்து மணிக்கு 321 கிலோமீட்டர் வேகத்தில் கீழே விழுந்து ஏர் இந்தியா விமானம் தீப்பிடித்து எரிந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.இதில் கேப்டன் 'சுமீத் சபர்வால்' என்பவர் தான் விபத்துக்குள்ளான விமானத்தின் கேப்டன் ஆவார். இதில் 'க்ளைவ் குந்தர்' என்பவர் விமானத்தின் முதல் அதிகாரி எனப்படும் துணை பைலட் ஆவார். இதில் சுமீத் சபர்வால் 8,200 மணி நேரம் விமானத்தில் பறந்த அனுபவம் கொண்டவர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ahmedabad plane crash Crash occurred because the tank was full of fuel


கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!



Advertisement

கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!




Seithipunal
--> -->