ரூ. 22,94,000/- மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகள்... மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்!
Government welfare assistance valued at Rs 2294000 was provided by the district revenue officer
சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித் அறிவுரையின்படி,காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட களத்தூர் கிராமத்தில் நடைபெற்றமக்கள் தொடர்பு முகாமில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளைமாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித் அறிவுரையின்படி, காரைக்குடி வட்டம், மித்ராவயல் உள்வட்டம், களத்தூர் கிராமத்திலுள்ள ”பீர் முகமது தர்கா” நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி அவர்கள் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அனைத்துத்தரப்பு மக்களையும் பயன்பெறச் செய்து வருகிறார்கள். பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில், அரசின் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கிடும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தினை தேர்ந்தெடுத்து, அதிலுள்ள கடைக்கோடி கிராமத்திற்கு சென்று, பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்று, தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கென ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இன்றையதினம் காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட களத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாமானது மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெறவிருந்தது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களால் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவதை தொடர்ந்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் தற்போது பங்கேற்று வருகின்றனர்.
மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரையின்படி, இம்மக்கள் தொடர்பு முகாமின் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் விரிவாக மக்களுக்கு எடுத்துரைத்துள்ளனர். இம்மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு, முன்னதாக பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அதில் தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, அம்மனுதாரர்களுக்கு உரிய நலத்திட்ட உதவிகளும், அதன் பயன்களும் இன்றைய தினம் வழங்கப்படவுள்ளன. மேலும், இன்றையதினமும் இம்முகாமின் வாயிலாக பெறப்படும் கோரிக்கை மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீதும் உடன் நடவடிக்கைகள் மேற்கொண்டு உரிய பலன்கள் வழங்கப்படும்.
மேலும், தங்களது கிராமத்தினை மாதிரி கிராமமாக உருவெடுத்திடும் பொருட்டு, அனைத்திலும் சிறந்து விளங்கிடும் வகையில் கிராம மக்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருந்திட வேண்டும்.
குறிப்பாக, கிராமப்புறம் முழுவதும் தூய்மையை பேணிக்காத்து, தங்களது சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்து கொண்டு, சுகாதாரமான கிராமமாக பாதுகாத்திட வேண்டும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் உயர்கல்வியை ஊக்குவித்து, அவர்களுக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும். பொதுமக்கள் அரசின் அனைத்து நலத்திட்டங்களை பெறுவதற்கு, இணையதள வாயிலாக விண்ணப்பங்களை அளிக்கலாம். விண்ணப்பிப்பதற்கென்று சம்மந்தப்பட்ட அரசு அலுவலகங்களை நேரில் நாட வேண்டியதில்லை.
இப்பகுதியில், பல்வேறு மேம்பாடு வசதிகள் மற்றும் தங்களின் தேவைகள் குறித்து பெறப்பட்டுள்ள மனுக்களில், தகுதியுடைய மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளப்பட்டு, அதற்குரிய பலன்கள் வழங்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் 41 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கான ஆணைகளையும், 02 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும், 05 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, இயற்கை மரண உதவிக்தொகை ஆகியவைகளுக்கான ஆணைகளையும், அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 41 பயனாளிகளுக்கு சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆணைகளையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 05 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 05 பயனாளிகளுக்கு மரக்கன்றுகளையும்,
வட்ட வழங்கல் பிரிவின் கீழ் 11 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும் என ஆக மொத்தம் 110 பயனாளிகளுக்கு ரூ. 22,94,000/- மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், காரைக்குடி வட்டாட்சியர் திரு.ராஜா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
English Summary
Government welfare assistance valued at Rs 2294000 was provided by the district revenue officer