பெண் போலீசாரை ஆபாசமாக படம் பிடித்து மிரட்டல்..போலீஸ்காரர் கைது!
Woman threatens by taking obscene pictures of a police officer Policeman arrested
பெண் போலீசார் பயன்படுத்தும் கழிவறையில் கேமராக்கள் பொருத்தி அதனை தனது செல்போனில் எடுத்து பெண் போலீசாரை ஆசைக்கு இணங்குமாறு மிரட்டல் விடுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் பகுதியில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்த பெண் போலீஸ் ஒருவர் தனக்கு நடந்த கொடுமைகளை புகார் மனுவாக கொடுத்தார்.அப்போது அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:வண்டிப்பெரியார் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசார் உடை மாற்றவும், கழிவறை செல்லவும் போலீஸ் குடியிருப்பு பகுதியில்உள்ள ஒரு கழிவறையை பயன்படுத்தி வந்தனர்.ஆனால் அந்த கழிவறையில் மர்ம நபர் ஒருவர் 4 ரகசிய கேமராக்கள் பொருத்தி பெண் போலீசார் உடை மாற்றும் காட்சிகளை ரகசியமாக பதிவு செய்து வைத்துள்ளார். மேலும் அந்த காட்சிகளை தனக்கு அனுப்பி ஆசைக்கு இணங்குமாறு மிரட்டுவதுடன் ,இதேபோல் பல பெண் போலீசாரை மிரட்டி வருகிறார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகார் மனுவில் பெண் போலீஸ் குறிப்பிட்டிருந்தார்.
புகாரின் பேரில் இடுக்கி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கழிவறையில் கேமராக்கள் பொருத்தியது அதே போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றிய 40 வயதான வைசாக் என்பது தெரியவந்தது. பெண் போலீசார் பயன்படுத்தும் கழிவறை இவரது வீடு கழிவறை அருகே அமைந்துள்ளது. இதனை பயன்படுத்தி யாரும் இல்லாத நேரத்தில் கழிவறையில் கேமராக்கள் பொருத்தி அதனை தனது செல்போனில் பர்த்துள்ளார்.
பின்னர் கடந்த 7 மாதமாக பெண் போலீசார் உடைமாற்றுவதை தனது செல்போனில் பதிவு செய்து அந்த ஆபாச வீடியோக்களை சம்பந்தப்பட்ட பெண் போலீசாருக்கு அனுப்பி தனது ஆசைக்கு இணங்குமாறு வைசாக் மிரட்டியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வைசாக்கை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் கழிவறையில் கேமராக்கள் வைத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
English Summary
Woman threatens by taking obscene pictures of a police officer Policeman arrested