ஷாக்கிங்...! சாதாரண கட்டணத்தை விட பல மடங்கு உயர்வு...! - சென்னை விமான பயணிகளுக்கு பேரிடி...!
Several times higher than normal fare Disaster Chennai air passengers
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு திரண்டிருந்த மக்கள், தற்போது மீண்டும் சென்னை நோக்கி பெருமளவில் திரும்பி வருகின்றனர்.
இதனால் ரெயில் மற்றும் பேருந்து நிலையங்கள் மக்கள் அலைமோதும் காட்சியுடன் காணப்பட்டு, அனைத்து சேவைகளிலும் கூட்ட நெரிசல் உச்சத்தை எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் சென்னை அடைய முடியாமல் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகும் நிலையும் உருவாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில், விரைவான பயணத்தை நாடி விமான சேவைகளைத் தேர்வு செய்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால், இந்த திடீர் தேவையை பயன்படுத்திக் கொண்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டதால், பொதுமக்கள் கடும் பொருளாதார அழுத்தத்தை சந்தித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் அவசரத் தேவையால் பயணிகள் விமானங்களை நாடி வருகின்றனர்.இந்த அதிகரித்த தேவையை தொடர்ந்து, நேற்றிரவு முதல் பல்வேறு விமான சேவைகளின் கட்டணங்கள் பெரிதும் உயர்த்தப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் வருமாறு:
மதுரை -சென்னை வழித்தடத்தில் வழக்கமாக ரூ.5,099 ஆக இருந்த கட்டணம், தற்போது ரூ.32,508 ஆக உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி - சென்னை பயணத்திற்கு ரூ.5,354 இருந்த கட்டணம், ரூ.17,089 ஆக பல மடங்கு உயர்ந்துள்ளது.
திருச்சி - சென்னை சேவையில் ரூ.4,551 என்ற கட்டணம், தற்போது ரூ.14,310 ஆக அதிகரித்துள்ளது.
கோவை - சென்னை வழித்தடத்தில் ரூ.4,634 இருந்த கட்டணம், ரூ.11,149 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த திடீர் கட்டண உயர்வு பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், அவசரமாக நகரம் திரும்ப வேண்டியவர்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Several times higher than normal fare Disaster Chennai air passengers