சிப்காட்டுக்கு எதிரான போராட்டம் - 7 பேர் மீது குண்டர் சட்டம்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு அருகே "சிப்காட் அலகு 3" என்ற திட்டத்தை கைவிடக் கோரியும் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும் மேல்மா பகுதி விவசாயிகள் கடந்த ஜூலை 7ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த போராட்டம் இன்று 126வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது இதுவரைக்கும் 11 வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். 

பல ஊர்களை சேர்ந்த விவசாயிகள் காத்திருப்பு போராட்டம், சாலை மறியல், நடைபயணம் உள்ளிட்ட பல்வேறு வகையான போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வந்தனர். 

அதில், கடந்த நான்காம் தேதி விவசாயிகள் நடைபயணம் சென்றபோது பேருந்து கண்ணாடிகளை உடைத்ததாக 20 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

seven farmars arrest by gundas act


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->