சிப்காட்டுக்கு எதிரான போராட்டம் - 7 பேர் மீது குண்டர் சட்டம்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு அருகே "சிப்காட் அலகு 3" என்ற திட்டத்தை கைவிடக் கோரியும் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும் மேல்மா பகுதி விவசாயிகள் கடந்த ஜூலை 7ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த போராட்டம் இன்று 126வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது இதுவரைக்கும் 11 வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். 

பல ஊர்களை சேர்ந்த விவசாயிகள் காத்திருப்பு போராட்டம், சாலை மறியல், நடைபயணம் உள்ளிட்ட பல்வேறு வகையான போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வந்தனர். 

அதில், கடந்த நான்காம் தேதி விவசாயிகள் நடைபயணம் சென்றபோது பேருந்து கண்ணாடிகளை உடைத்ததாக 20 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seven farmars arrest by gundas act


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->