செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: EDக்கு நோட்டீஸ்! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்ந்து நீதிமன்றம், உயர் நீதிமன்றம் நிராகரித்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் பெற எந்த ஒரு தகுதியும் இல்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்தது. 

இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தார். 

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. 

மேலும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் வழக்கை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவில் உச்ச நீதிமன்றம் தலையிட மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthil Balaji bail Supreme Court order


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->