மாணவர்களின் நலனுக்காக போராட்டம் வாபஸ் - இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில், பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி தலைமையில் இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகி ராபர்ட் தெரிவித்ததாவது:- 

"மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்து வருவதாலும், தொடக்கப் பள்ளி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாலும், மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக" தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

secondary teachers asociation withdraw protest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->