மாணவர்களின் நலனுக்காக போராட்டம் வாபஸ் - இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில், பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி தலைமையில் இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகி ராபர்ட் தெரிவித்ததாவது:- 

"மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்து வருவதாலும், தொடக்கப் பள்ளி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாலும், மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக" தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

secondary teachers asociation withdraw protest


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->