“நாயை நிப்பாட்டினாலும்” இப்படி மானங்கெட்டு போய் ஒரு கூட்டணியில் உள்ளீர்களா காங்கிரஸ்? அதிமுக விமர்சனம்!
ADMK say about dmk boss venkat comment congress
அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "காங்கிரஸ் கட்சி நிற்கின்ற தொகுதியை, “நாயை நிப்பாட்டினாலும்” என்கிறார் திமுக நிர்வாகி போஸ் வெங்கட்...
இப்படி மானங்கெட்டு போய் ஒரு கூட்டணியில் உள்ளீர்களா காங்கிரஸ்?
திமுக-வின் ஆணவப் போக்கிற்கு ரொம்ப ரோஷமாக பேசிய மாணிக்கம் போன்றோர் இப்போதும் தைரியமாக பேசுவார்களா? இல்ல , அமைதியா கடந்து போவாங்களா?
இது ஒரு பக்கம் என்றால், புதுச்சேரியில் தனித்து போட்டி என அறிவித்து, திமுக-விடம் சீட்டுக்கு அலையோ அலையென அலைந்துகொண்டு இருக்கிறது விசிக.
மார்க்சிஸ்ட் தோழர்களோ, வேண்டா வெறுப்பாக கையெழுத்து போட்டதாக பகிரங்கமாக அறிவித்துவிட்டனர்.
ஒரு புது கட்சி வந்ததை காரணமாக காட்டி, கூடவே இருந்த கட்சிகள் மீதான நீண்ட நாள் வன்மத்தை தீர்த்துக்கொள்கிறதா திமுக ?
இவர்களும் இப்படி வெட்கமே இல்லாமல் அங்கே உட்கார்ந்துகொண்டு இருக்கிறார்களே… சோகங்கள்!
#கலகலக்கும்_திமுககூட்டணி" என்று தெரிவித்துள்ளது.
English Summary
ADMK say about dmk boss venkat comment congress