2-வது நாளாக சுற்றுலா தலங்கள் மூடல்..இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு!  - Seithipunal
Seithipunal


தொடர் மழையால் நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்கள் நேற்று மூடப்பட்டு இருந்தன. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தொட்டபெட்டா காட்சி முனை, அவலாஞ்சி, பைன் பாரஸ்ட், கேரன்ஹில் ஆகிய சுற்றுலா தலங்கள் 2-வது நாளாக இன்றும் தற்காலிகமாக மூடப்படுவதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்து உள்ளார்.

கேரளாவில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரலான மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை கனமழை பெய்தது. கன்னியாகுமரி, நெல்லை ,தென்காசி ,நீலகிரி ,தேனி திண்டுக்கல் ,கோயம்புத்தூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை பெய்தது. சென்னையில் கடந்த சிலநாட்களாக மாலை நேரங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது.ஒருபுறம் மழை பெய்துவந்தாலும் மறுபுறம் வெப்பம் வாட்டி வதைத்தது. 

இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக  கனமழை பெய்துவருகிறது . தொடர் கனமழையால் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன. மண் சரிவும் ஏற்பட்டது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.ரோட்டோரம் நின்ற மரங்கள் பல இடங்களில் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்ப ட்டது.

தீயணைப்பு வீரர்களும், மீட்பு படையினரும் சம்பவ இடங்களுக்கு சென்று மரங்களை அகற்றி வருகிறார்கள். இதன்காரணமாக மஞ்சனகோரை, முத்தோரை பாலாட், முள்ளிக்கூரை, கப்பத்துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட  கிராமங்கள் இருளில் மூழ்கின.இதேபோல மாவட்டத்தின் பல இடங்களில் மின் கம்பங்கள் மீது மரம் விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கார், ஆட்டோக்கள் மீது மரம் விழுந்ததால் வாகனங்களும் சேதம் அடைந்தன.

தொடர் மழையால் நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்கள் நேற்று மூடப்பட்டு இருந்தன. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தொட்டபெட்டா காட்சி முனை, அவலாஞ்சி, பைன் பாரஸ்ட், கேரன்ஹில் ஆகிய சுற்றுலா தலங்கள் 2-வது நாளாக இன்றும் தற்காலிகமாக மூடப்படுவதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்து உள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் பகுதிகளில் தேசிய-மாநில பேரிடர் குழுவினர் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவசர காலங்களில் உதவி தேவைப்பட்டால் 1077 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Second day of closing tourist spots Life completely affected


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->