பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு: வரும் டிசம்பர் 15-ஆம் தேதி அரையாண்டு தேர்வு..!
School students will have their mid year exams on December 15th
தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கான, 2025 - 26-ஆம் கல்வியாண்டுக்கான அரையாண்டு தேர்வு, வரும் டிசம்பர் 15-ஆம் தேதி தொடங்குகிறது.
தொடக்கப் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவியருக்கு, இரண்டாம் பருவத் தேர்வு, வரும் டிசம்பர் 15 முதல் 23 வரை நடக்கிறது. அதேப்போன்று ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரைக்கான தேர்வும், அதே நாட்களில் நடக்கிறது. இந்த தேர்வுகள், காலை, மாலை என, இரு வேளைகளில் நடைபெற உள்ளன.
மேலும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு, டிச., 10-ஆம் தேதி துவங்கி, 23-இல் முடிகிறது. அதன்பின், அரையாண்டு விடுமுறை தொங்கவுள்ளது. 2026 ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
School students will have their mid year exams on December 15th