பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை..இதெல்லாம் ஒரு காரணமா.!! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியை சேர்ந்தவர் கோட்டையம்மாள். இவரது மகள் ஆண்டவூரணி ( 15 வயது ) திருவாடனை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார்.

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிந்து விடுமுறையில் இருந்த மகளுக்கும் தாய்க்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. கோட்டையம்மாளின் கணவர் இருவரையும் கண்டித்துள்ளார். 

தாயின் செயலால் மனம் உடைந்த  மாணவி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. தினந்தோறும் தாய் வீட்டு வேலை செய்ய சொல்லி வற்புறுத்துவதாக அவர்களது தோழிடம் மாணவி தெரிவித்துள்ளார்.

மன உளைச்சல் இருந்த மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து, திருவாடனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். மாணவி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

School student suicidesuicide


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->