புதுக்கோட்டையில் சோகம் - பாம்பு கடித்து பள்ளி மாணவி பலி.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி அருகே மீனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவரர்கள் விஜயகாந்த் - ரேணுகா தம்பதியினர். இவர்களது மூத்த மகள் சந்தியா மீனம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இவரை கடந்த ஒன்பது நாட்களுக்கு முன்பு பாம்பு கடித்துள்ளது. ஆனால், இதனை அறியாத சந்தியா வீட்டிலேயே இருந்த நிலையில் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் அவரை அவரது பெற்றோர் ஆம்புலன்ஸ் மூலம் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

அங்கு மாணவி சந்தியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரை பாம்பு கடித்துள்ளது என்பதை உறுதி செய்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சந்தியா இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student dide for snake bite in puthukottai


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->