அரியலூரில் 12 ஆம் வகுப்பு மனைவி மாயம்!
school girl missing case
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே ஒக்கநத்தம் மேல் வீதியை சேர்ந்தவர் அஞ்சப்பன். இவரது மனைவி தேவி (வயது 43), இவர்களுக்கு அனுஷியா (வயது 17) என்ற மகள் உள்ளார்.
![](https://img.seithipunal.com/media/CRIME 002.png)
சிறுமி அனுஷியா, நடுவலூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் தாய் தேவி மற்றும் அனுஷியா இருவரும் வீட்டில் இருந்த நிலையில் தேவி சிறிது நேரம் தூங்கியுள்ளார்.
பின்னர், தேவி தூங்கி எழுந்து பார்த்தபோது மகள் அனிஷியா வீட்டில் இல்லை. இதனால் தேவி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள் என பல இடங்களில் மகளை தேடியுள்ளார். ஆனால் எங்கும் அனுஷியாவை காணவில்லை.
![](https://img.seithipunal.com/media/crime police 21-xrya8.png)
இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்திற்கு சென்று தேவி புகார் அளித்தார். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார், மாயமான சிறுமி அனுஷியாவை தேடி வருகின்றனர்.