பள்ளி மாணவிகளை அழைத்து சென்ற பேருந்து தீப்பற்றி விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயர்தப்பினர்.! - Seithipunal
Seithipunal


அரக்கோணம் அருகே இன்று காலை பள்ளி மாணவிகளை அழைத்து வந்து கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் 10 மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சேந்தமங்கலத்தில் மாணவர்களுடன் சென்ற பள்ளி பேருந்து சேந்தமங்கலத்தில் காஞ்சிபுரம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு மாணவிகளும் ஓட்டுநரும் நடத்துநரும் கீழே இறங்கினர். இச்சம்பவத்தில் பள்ளிப் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. அஇதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த அரக்கோணம் தீயணைப்புத் துறையினர் நேரில் வந்து தீயை அணைத்தனர்.

இச்சம்பவம் குறித்து  நெமிலி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிப் பேருந்து தீப்பற்றி எரிந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School bus fired in arakonam


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->