செம்மர கடத்தல் வழக்கில் சசிகலாவின் உறவினர் கைது..!! - Seithipunal
Seithipunal


செம்மரக் கடத்தல் வழக்கு தொடர்பாக சசிகலாவின் தங்கை இளவரசியின் மகன் விவேக்கின் மாமனாரான பாஸ்கரை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சென்னை அடுத்த அண்ணாநகரில் வசித்து வரும் சசிகலாவின் உறவினரான பாஸ்கர் நடத்தி வந்த பர்னிச்சர் கடையில் கடந்த டிசம்பர் மாதம் 48 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து பாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று அண்ணாநகரில் உள்ள பாஸ்கர் வீட்டிற்கு வந்த மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அவரை தியாகராய நகரில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து வந்திருந்தனர். அங்கு வைத்து நேற்று நள்ளிரவில் நீண்ட நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணை முடிவில் செம்மரம் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சசிகலா உறவினரான பாஸ்கர் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பாஸ்கர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sasikala relation arrested in redwood smuggling


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->