பள்ளத்தில் சிக்கிய சாரங்கபாணி கோயில் தேர்! தேரோட்டம் தடை.!
Sarangapani Temple Chariot Stuck ditch
கும்பகோணம், சாரங்கபாணி கோவில் தேரோட்டம் இன்று காலை 7.05 மணிக்கு வடம் பிடித்து தொடங்கப்பட்டது. தேரோட்டம் முற்பகல் 10:30 முதல் 10:45 மணியளவில் சங்கரபாணி தெற்கு வீதிக்கு சென்று கொண்டிருந்தது.
அபபோது திடீரென இடது புற சக்கரம் சுமார் 5 அடி ஆழத்துக்கு திடீரென உள்வாங்கியது. இதனை தொடர்ந்து பள்ளத்தில் மணல், ஜல்லி, கற்கள் போன்றவை கொட்டப்பட்டு தேர் சக்கரத்தை மீட்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.
![](https://img.seithipunal.com/media/threr-za868.jpg)
இதற்கிடையே குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் அண்மையில் அந்த பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு சீர் செய்யப்பட்டது. பிறகு பள்ளம் சரியாக மூடப்படாத நிலையில் தேர் சக்கரம் உள் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தேரோட்டம் 2 மணி நேரம் தடைபட்டுள்ளது.
English Summary
Sarangapani Temple Chariot Stuck ditch