உண்மையான சமூகப் பொறுப்பு உடையவர் எப்போதும் தொழிலாளர்களின் பக்கமே நிற்பார் - வைரமுத்து!
sanitation worker mk stalin DMK Vairamuthu
சென்னையில் தூய்மை பணியாளர்கள் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததை பல்வேறு அரசியல் தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். இதன் பின்னர், தமிழக அரசு தூய்மை பணியாளர்களுக்காக 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டது. இதில், இலவச காலை உணவு, பணியில் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட நலத் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த சூழலில், கவிஞர் வைரமுத்து தூய்மை பணியாளர்களுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தினார். தனது எக்ஸ் பதிவில், உண்மையான சமூகப் பொறுப்பு உடையவர் எப்போதும் தொழிலாளர்களின் பக்கமே நிற்பார் என்றும், தானும் அவர்களுடன் நிற்பதாகவும் தெரிவித்தார். தூய்மை பணியை நுரையீரலைப் பணயம் வைத்து செய்து வரும் இவர்கள் சாதாரண மனிதர்களால் செய்ய முடியாத பெரும் தியாகிகள் என்றும், அவர்கள் எதிர்பார்ப்பது கருணையல்ல, உரிமை என்றும் குறிப்பிட்டார்.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை அறிவித்த ஆறு அம்சத் திட்டம், அவர்களின் வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் வகையில் அமையும் என்ற நம்பிக்கையும் தெரிவித்தார். தூய்மை பணியாளர்கள் விரைவில் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், அவர்களின் கோரிக்கைகள் காலப்போக்கில் நிறைவேறும் என்றும் கூறினார்.
இறுதியாக, தொழிலாளர்களின் நலம் சமுதாய நலத்துடன் இணைந்துள்ளது என்பதை வலியுறுத்தி, அனைவருக்கும் விடுதலை தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
English Summary
sanitation worker mk stalin DMK Vairamuthu