கள்ளக்காதல் விவகாரத்தில் கொடூரம்: மனைவி, மகனை கொன்று தனியார் நிறுவனம் மேலாளர் தற்கொலை!
salem illigal affair case
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கருத்தானூர் பகுதியில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சத்யா (33), தனது மகள் மஹிஷா (13), மகன் கிஷாந்த் (10) ஆகியோருடன் வசித்து வந்தார். கணவர் ராஜ்குமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேறு பெண்ணுடன் வாழத் தொடங்கியதால், சத்யா குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.
தந்தையின் நிலத்தில் கரும்பு ஆலை நடத்தி வந்த அவர், ஓமலூரில் உள்ள ஒரு தனியார் ஷோரூமிலும் வேலை பார்த்து வந்தார். அங்கு மேலாளராக இருந்த சக்திவேலுடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக சத்யா அவரிடம் பேசாமல் இருந்தது, மேலும் வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தால் சக்திவேல் மனஅழுத்தத்தில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சம்பவம் நடந்த இரவு சக்திவேல் சத்யாவின் வீட்டிற்கு சென்றார். கதவு திறக்காததால் ஏற்பட்ட பதற்றத்தில், பின்னர் உள்ளே நுழைந்த அவர் ஆத்திரத்தில் சத்யாவையும், அவரது மகன் கிஷாந்தையும் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார்.
கடுமையாக காயமடைந்த சத்யா உதவி கேட்டு வெளியே ஓடிய நிலையில், உறவினர்கள் வந்து இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் சிறுவன் கிஷாந்த் உயிரிழந்தான். சத்யா சிகிச்சை பெற்று வருகிறார்.
விசாரணையில், இந்த தாக்குதல் கள்ளத்தொடர்பு தகராறு காரணமாக நடந்தது தெரியவந்தது. தப்பியோடிய சக்திவேல் பின்னர் காட்டுப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
சக்திவேலுக்கும் மனைவி, குழந்தைகள் இருப்பதும், குடும்ப பிரச்சினையால் அவர் தனியாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
English Summary
salem illigal affair case