விவசாய கிணற்றின் அருகே புதர் செடிகள்.. அப்புறப்படுத்த சென்றவருக்கு நிகழ்ந்த விபரீதம்..!
salem farmer died after falling into 70 foot well
களை செடிகளை அகற்றிய போது நிலைதடுமாறி கிணற்றில் விழுந்த முதியவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (55). இவருக்கு திருமணமாகி ஒரு மகனும் இரு மகளும் உள்ளனர். தற்போது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால், அவரின் விவசாய கிணற்றில் நீர் நிரம்பியது. இதனால், கிணற்றை சுற்றி இருந்த புதர் செடிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டார். அப்போது மண் சரிந்ததால் அவர் கிணற்றினுள் விழுந்துள்ளார்.
இதனை கண்ட, உறவினர்கள் தீயணைப்பு துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த அவர்கள் பொதுமக்கள் உதவியுடன் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.
மின் மோட்டார்கள் மூலம் அங்கிருந்து தண்ணீரை வெளியேற்றி 20 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அவரின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
salem farmer died after falling into 70 foot well