எண்ணூர் அனல்மின் நிலைய விபத்து: உயிரிழந்த 09 பேருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!
Rs10 lakh compensation each for 9 people who died in Ennore thermal power plant accident
சென்னை அருகே எண்ணூர் அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணியின்போது சாரம் இடிந்து விழுந்ததில் வடமாநில தொழிலாளர்கள் 09 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
'எண்ணூரில் பெல் நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பணியாளர்கள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு மின்துறை அமைச்சர் சிவசங்கரையும், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ரக்ரியையும் உடனே நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 இலட்சம் நிவாரணமாக வழங்கிடவும், அவர்களது உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆணையிட்டுள்ளேன்.' என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
English Summary
Rs10 lakh compensation each for 9 people who died in Ennore thermal power plant accident