வாயிலும் கைகளிலும் பாம்பை கையாளும் ஆபத்தான சாகசம்! - ஓடிசாவில் வெளியான அதிர்ச்சி வீடியோ!
Tankeros stunt involving handling snacks meth and hunts shocking video released Odisha
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில், உயிரைப் பொருட்படுத்தாத அதிர்ச்சி சம்பவம் ஒன்று வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெமுனாவை சேர்ந்த காகா பாய் என்ற நபர், ஒரு பெரும் அளவிலான பாம்பை எந்த பாதுகாப்பும் இன்றி கைகளால் பிடித்ததோடு மட்டும் இல்லாமல், அதை நேரடியாக தனது வாயில் வைத்துக் கையாளும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

மிக வேகமாக நடந்த இந்த செயலில், பாம்புக்கே எதிர்வினை அளிக்க நேரமில்லாதபடி தெரிகிறது.பின்னர், அந்த பாம்பை வாயில் வைத்தபடியே சுற்றித் திரிந்த அவர், அதை தரையில் இறக்கி வெறும் கைகளால் கட்டுப்படுத்துகிறார்.
அருகில் இருந்த ஒருவர் பாம்பை அவரிடமிருந்து எடுத்துச் செல்ல முயன்றபோதும், அவரை தள்ளி விலகச் சொல்லி தானே கையாளத் தொடங்குகிறார். சுற்றியிருந்த மக்கள் அச்சத்துடன் இந்த ஆபத்தான சாகசத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.சில நொடிகளுக்கு பிறகு, பாம்பை தரையில் வைத்து அதனுடன் விளையாடியபடி, எந்த கருவிகளும் இன்றி ஒரு சாக்குப் பையில் அடைத்து விடுகிறார்.
வீடியோவின் இறுதியில் அவர் மேலும் ஒரு பாம்பை பிடிக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.இதற்கிடையே, இதேபோன்ற மற்றொரு அதிர்ச்சி சம்பவம் ஆந்திரப் பிரதேசத்திலும் நடந்துள்ளது. மதுபோதையில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த ஒருவரை விஷமுள்ள கருநாகம் கடித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் உதவி தேடாமல், கோபத்தில் அந்த நபர் பாம்பை பிடித்து அதன் தலையை கடித்து கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்பிறகு, அந்த இறந்த பாம்பை வீட்டிற்கு எடுத்துச் சென்று அருகில் வைத்தபடி தூங்கியதாகவும் கூறப்படுகிறது.
நள்ளிரவுக்குள் விஷம் உடல் முழுவதும் பரவி அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவசரமாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இந்த சம்பவங்கள் இரண்டும் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
English Summary
Tankeros stunt involving handling snacks meth and hunts shocking video released Odisha