வழிப்பறி வழக்கு... குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலியில் நடந்த  வழிப்பறி வழக்கு ஒன்றில் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


கடந்த 2018-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அருகே, ஒரு பெண்ணிடம் முத்துக்குமார் என்பவர் தங்கச்செயினை வழிப்பறி செய்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் புலன் விசாரணை நடத்தினர்.அப்போது  போலீசார் முடிவில், நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி மூன்றாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் குற்றவாளியான முத்துக்குமாருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதித்துறை நடுவர் ஜெயசங்கரகுமாரி நேற்று குற்றவாளிக்கு, வழிப்பறி குற்றத்திற்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. 

இந்த வழக்கில் சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த திருநெல்வேலி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி., போலீஸ் இன்ஸ்பெக்டர் , சிவந்திபட்டி காவலர்கள், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர்ஆகியோரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

அந்தவகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 3 வழிப்பறி வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது . நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் முனைப்பில் தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Robbery case Court sentences the criminal to 3 years in prison


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->