கார்த்திகை சுபமுகூர்த்தம்: சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு! - Seithipunal
Seithipunal


பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கார்த்திகை மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களில் அனைத்துச் சார் பதிவாளர் அலுவலகங்களிலும் ஆவணப் பதிவுக்காகக் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப் பதிவுத் துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

பொதுவாக, சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறுவதால், இந்தக் கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

கூடுதல் ஒதுக்கீடு விவரம்

கார்த்திகை மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான நவம்பர் 27, 2025 அன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கக் கோரி பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வந்தன. அதன் அடிப்படையில், பின்வருமாறு ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது:

ஒரு சார்பதிவாளர் அலுவலகம்  - 150 டோக்கன்கள் 
இரண்டு சார்பதிவாளர்கள் அலுவலகம்  - 300 டோக்கன்கள் 
அதிகப் பதிவு நடைபெறும் 100 அலுவலகங்கள் - 150 சாதாரண + 16 தட்கல் டோக்கன்கள் 

பொதுமக்கள் ஆவணப் பதிவுகளைச் சுலபமாக மேற்கொள்ள உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பதிவுத் துறை தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RI dept reservation token


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->