மீண்டும் மீண்டும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்...!மீனவர்கள் 8 பேரை கைது செய்த அவலம்...!
Repeated atrocities by Sri Lankan Navy tragedy arrest 8 fishermen
இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தெரிவித்து அவ்வப்போது இலங்கை கடற்படை கைது செய்து வருகிறது.

இதில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான், மீன் பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் நிலையில், இலங்கை கடற்படையினரின் அராஜகம் மீண்டும் தொடங்கியுள்ளது.
கடலில் மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்பி கொண்டிருந்த போது ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேரை ஒரு படகுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக இலங்கை கடற்படை அழைத்து சென்றுள்ளனர்.
மேலும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Repeated atrocities by Sri Lankan Navy tragedy arrest 8 fishermen