தமிழகம், புதுவைக்கு ரெட் அலர்ட்.! 5 மாவட்ட மக்களுக்கு பகிரங்க எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


வங்க கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறி கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.

மேலும், இந்த புயல் காரணமாக, 24, 25 தேதிகளில் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழையும், ஒரு சில இடங்களில் அதீத கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

24 ஆம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 25 ஆம் தேதி சிவப்பு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, தமிழகத்தின் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி - காரைக்கால் பகுதிகளுக்கும் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறி வரும் 25-ஆம் தேதி நண்பகலில் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

red alert in tamilnadu


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->