காணமால் போன இளைஞர் சடலமாக மீட்பு.. காவல்துறை தீவிர விசாரணை..!
Recovery of the body of a missing youth
காணமல் போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், கீழப்புலியுர் பகுதியில் உள்ள கல்குவாரி படத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று இருப்பதாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த காவல்துறையினர் அவரின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த சடலம் தூத்துகுடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவர் என்பது தெரியவந்தது. அவர் காணாமல் போனதாக புகார் இருந்ததை அடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Recovery of the body of a missing youth