பிரிந்து சென்ற மனைவி.. பக்குவமாக பேசி பாய்போட்டு, பாறாங்கல்லை தலையில் போட்டு கொலை..! - Seithipunal
Seithipunal


பிரிந்து சென்று தனியாக வாழ்ந்த மனைவியிடம் பக்குவமாக பேசி வீட்டிற்கு அழைத்து, கொலை செய்த கணவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி மருதுபாண்டியர் நகரை சார்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் வெற்றிச்செல்வன் (வயது 31). இவர் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வருகிறார். 

இவருக்கும், மதுரையில் உள்ள யாக்கப்பா நகரை சார்ந்த குணசேகரன் மகள் சரண்யா (வயது 27) என்பவருக்கும் இடையே கடந்த 9 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

கடந்த சில வருடத்திற்கு முன்னதாக கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சரண்யா கணவரை பிரிந்து குழந்தைகளுடன் மதுரையில் உள்ள தாயின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், குடும்ப சூழ்நிலை காரணமாக மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மதுபோதையில் மனைவிக்கு போனில் தொடர்பு கொண்டு பேசிய வெற்றிச்செல்வன், உன்னை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. பரமக்குடிக்கு வருகிறாயா? என்று பேசி கோரிக்கை வைத்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்டு சரண்யாவும் பரமக்குடிக்கு சென்ற நிலையில், இவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

மேலும், போதையில் இருந்த செல்வம் உனக்கு மதுரையில் மற்றொருவருடன் தகாத உறவு இருக்கிறது என்று கூறி பிரச்சனை செய்துள்ளான். இதில் ஆத்திரமடைந்த வெற்றிச்செல்வன், வீட்டின் வெளியே இருந்த பாறாங்கல்லை எடுத்து சரண்யாவின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார்.

பின்னர், பரமக்குடி காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று விஷயத்தை கூறி சரண் அடைந்துள்ளார். இதனையடுத்து விஷயத்தை கேட்டறிந்த காவல் ஆய்வாளர் தமிழ்செல்வி மற்றும் பிற காவல்துறையினர், சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து வெற்றிச்செல்வனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram Paramakudi woman Murder by Husband due to Affair Doubts


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->