#சற்றுமுன் || தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் புதுக்கோட்டை, நாகர்கோவில், தேனி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்த நிலையில், புதுக்கோட்டை, நாகர்கோவில், தேனி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, கீரமங்கலம், கீரனூர், அன்னவாசல், பொன்னமராவதி, கந்தர்வகோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக காற்றுடன் மழை பெய்து வருகிறது.

இதேபோல், நாகர்கோவில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், தேனி மாவட்டத்தில், 3 மணி நேரமாக இடி மற்றும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rain in theni nagarkovil pudukottai now


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->