அரசு பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், புத்தகப்பை உள்ளிட்டவை தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் மழை கோட், கணுக்கால் வரையிலான பூட்ஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாணவ-மாணவிகளுக்கு படிப்படியாக பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளி கல்வித்துறையில் மாணவ-மாணவிகள் படிக்க என்ன தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. 

ஏற்கனவே மாணவர்களுக்கு இலவச சீருடை, இலவச பாடப்புத்தகங்கள், காலணிகள் வழங்கப்படுவது போல வரும் கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மழைகோட், கணுக்கால் வரையிலான பூட்ஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழைப்பொழிவு அதிகம் உள்ள மாவட்டங்கள், மலைப்பிரதேச மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஒரு லட்சம் பேருக்கு முதற்கட்டமாக மழைகோட் வழங்கப்படும். 

முழுமையாக பள்ளிக்கூடங்கள் திறந்ததும் பாட புத்தகங்கள் வழங்கும் போதே இதையும் சேர்த்து வழங்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rain coat for govt school students


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->