தமிழகத்தில் இரவு 10 மணி வரை, 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - கவனம் மக்களே! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இரவு 10 மணி வரை 10 மாவட்டங்களில் லேசான மழை உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானம் மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களிலும் இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அதன்படி, நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rain alert in Tn 10 Districts


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->