மது பாட்டில்கள் கடத்தலில் ஈடுபட்ட பெண் அதிரடி கைது: தீவிர விசாரணையில் போலீசார்! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தலைமையில் நேற்று நள்ளிரவு கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அந்த வழியாக சென்று ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்திய போது அதில் இருந்த ஒரு பெண் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். 

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் உடனடியாக காரை சோதனை செய்தனர். அப்போது அதில் 12 பெட்டிகளில் 576 மது பாட்டில்கள் இருந்துள்ளது. 

பின்னர் போலீசார் மது பாட்டில்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தியாக துருக்கத்தை சேர்ந்த விஜயா (வயது 43) என்பதும் புதுச்சேரியில் இருந்து தியாக துருக்கத்திற்கு மதுபாட்டில்களை கடத்திச் சென்றதும் தெரிய வந்தது. 

இதனை அடுத்து போலீசார் விஜயாவை கைது செய்து, இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry woman arrested smuggling liquor bottles


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->