விடியலை எதிர்நோக்கி இருக்கும் அங்கன்வாடி மையம்… புதிய கட்டிடம் கட்டிதர பொதுமக்கள் கோரிக்கை…! - Seithipunal
Seithipunal


இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் அமைத்து தர பொதுமக்கள் விடுத்துள்ளனர்.

 திருவாரூர் மாவட்டம், போழக்குடி கிராமத்தில்  50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த கட்டிடம் அங்குள்ள நடுநிலைபள்ளி வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தில் அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த அங்கன்வாடி மையம் மிகவும் பழமையானதால் அந்த கட்டிடம்  மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால், அந்த பகுதியில் உள்ள சமூக நல கூடத்தில் அங்கன்வாடி மையத்தை நடத்தி வருகின்றனர். சமூக நல கூட்டத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இருக்கவில்லை.

மேலும், சேதமடைந்த அங்கன்வாடி மையம் நடுநிலைபள்ளி வளாகத்தில் உள்ளதால் கட்டிடம் இடிந்து விழுந்து விடுமா என்ற அச்சத்தில் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். எனவே பழையகட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டிதரவேண்டும் என்பது அந்த கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Public demand for building a new Anganwadi Center


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->