டாஸ்மாக் மதுக்கு எதிராக 100 கருத்தரங்குகள் – புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் மது, கள் மற்றும் போதைப் பொருள்களின் எதிராக 100 இடங்களில் கருத்தரங்குகள் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மதுரையில் தெரிவித்தார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழகத்தில் 60% மக்கள் குடிப்பழக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர். இளம் தலைமுறையை கள் ஒரு உணவுப் பதார்த்தமாக பிம்பிப்பது மிக மோசமான விஷயம். உண்மையில் கள் என்பது போதைப் பொருள்; திருக்குறளிலும் அதற்கெதிராகவே கூறப்பட்டுள்ளது.

ஜூலை 27-ல் திருச்சியில் 1,000 பெண்கள் பங்கேற்கும் கருத்தரங்குடன் இந்த இயக்கம் தொடங்கும். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2-ல் தேனியில் நடைபெறும்.” என அவர் குறிப்பிட்டார்.

மேலும் மாஞ்சோலை விவகாரம் குறித்து, “1000-க்கும் மேற்பட்ட மக்கள் பல தலைமுறைகளாக வசித்து வரும் மாஞ்சோலை பகுதியில் குடியமர்வதற்காக வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அரசு, சொந்த மக்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வாதாடியது. மனித உரிமை ஆணையம் குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க உத்தரவிட்டபோதும், அரசு அதை நிறைவேற்றவில்லை” என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PT Krishnasamy TASMAC


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->