ஆத்துல ஒரு கால்.. சேத்துல ஒரு கால்! அடித்து ஆடும் பிரேமலதா! அப்போ அதிமுக கூட்டணி? அதிர்ச்சியில் எடப்பாடி! - Seithipunal
Seithipunal


2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக அரசியல் கூட்டணிகள் மீண்டும் கலைக்கப்பட்ட மேடையைப் போல பரபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. திமுக கூட்டணி ஏற்கனவே வலுவாகத் தொடரும் நிலையில், அதிமுக தனது கூட்டணியை வலுப்படுத்த தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக–தேமுதிக கூட்டணி இருந்து வந்தது. ஆனால் பின்னர் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் எம்பி சீட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்திய தேமுதிக கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்ததால் உறவில் பிளவு ஏற்பட்டது. இதனால், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக மீது தொடர்ந்து அதிருப்தி வெளியிட்டு வருகிறார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற ஜி.கே. மூப்பனாரின் நினைவு தின நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமியும், தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷும் பங்கேற்றனர். இதனால், அதிமுக–பாஜக–தேமுதிக கூட்டணி உறுதியாகும் என அரசியல் வட்டாரங்களில் கருதப்பட்டது.

ஆனால் சில மணி நேரங்களிலேயே பிரேமலதாவின் கூற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேமுதிக பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய அவர், “மாநிலங்களவை சீட்டுக்கான உறுதிமொழி கடிதத்தை எடப்பாடி பழனிசாமி கொடுத்தார். ஆனால் அதை நிறைவேற்றாமல் துரோகம் செய்துவிட்டார். அரசியல் நாகரிகம் கருதி அந்தக் கடிதத்தை வெளியிடவில்லை” என்று குற்றம் சாட்டினார்.

2026 தேர்தலுக்கு வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்த பாஜக–அதிமுக தலைவர்கள், பிரேமலதாவின் இந்த உரையால் சிக்கலில் சிக்கியுள்ளனர். ஏற்கனவே தேமுதிக திமுகவுடன் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் பரவிய நிலையில், இப்போது ஏற்பட்ட இந்த நிலைமை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு சிக்கலாகியுள்ளது.

அரசியல் வட்டாரங்கள் தெரிவிப்பதாவது, எல்.கே. சுதீஷின் சமீபத்திய நகர்வுகள், இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்துவதை நோக்கியே அமைந்துள்ளன. கடந்த காலங்களிலும் தேமுதிக இதேபோல கடைசி நேரம் வரை அதிமுக, திமுக ஆகிய இரு தரப்போடும் பேரம் பேசித் தீர்மானம் எடுத்துள்ளது என்பது நினைவுபடுத்தப்படுகிறது.

இந்திய அரசியலில், 2026 தேர்தல் எடப்பாடி பழனிசாமிக்கும், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி : தொடர்ச்சியான தோல்வி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற அழுத்தத்தில் உள்ளார்.

மு.க. ஸ்டாலின் : திமுக இதுவரை தொடர்ச்சியாக இருமுறை ஆட்சி அமைத்ததில்லை என்ற குறையை போக்க வேண்டும் எனக் குறிக்கோளுடன் செயல்படுகிறார்.

திமுக தனது கூட்டணியை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல கட்சிகளுடன் வலுப்படுத்திய நிலையில், அதிமுக கூட்டணி அமைப்பு இன்னும் குழப்பத்திலேயே உள்ளது. பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் அதிமுகவுடன் சேர வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டாலும், தேமுதிக எந்த அணியில் நிற்கும் என்ற கேள்வியே இப்போது தமிழக அரசியலில் முக்கியக் கேள்வியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Premalatha is dancing So AIADMK alliance Edappadi is shocked


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->