சென்னை வடபழனியில் பகீர் சம்பவம்: 04-வது மாடியில் இருந்து குதித்து கர்ப்பிணி பெண் தற்கொலை முயற்சி..!
Pregnant woman attempts suicide by jumping from 4th floor in Vadapalani Chennai
சென்னை வடபழனியில் கர்ப்பிணி பெண் ஒருவர் 04-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீட்கப்பட்ட அவர் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வடபழனி பாலாஜி அவென்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் சுரேஷ் (28). பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர், தனியார் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி சரஸ்வதி (23) மற்றும் ஒன்றரை வயதில் இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று இருக்கிறான். இந்நிலையில் சரஸ்வதி தற்போது கர்ப்பமாக உள்ளார்.

நேற்று இரவு சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்த நிலையில், திடீரென தனது மனைவி அலறும் சத்தம் கேட்டு எழுந்துள்ளார். அப்போது மனைவி குடியிருப்பு வீட்டின் 04 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று எலும்பு முறிவுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளார்.
இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த அவர் தனது மனைவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சுரேஷ் கூறுகையில், மனைவி சரஸ்வதி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், போலீசார் அவரது கணவரிடம் தற்கொலை முயற்சி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Pregnant woman attempts suicide by jumping from 4th floor in Vadapalani Chennai