ஜவுளி துறையில் ஏற்பட்ட மந்த நிலையால் வேலை இழந்த தொழிலாளர்கள்..! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 2 லட்சத்திற்கும் அதிகமான விசைத்தறிகள் மூலம் தினசரி ஒரு கோடி மீட்டருக்கும் அதிகமான துணிகள் உற்பத்தி ஆகின்றன. சமீப காலமாக ஜவுளி துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவால் காடா துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பலர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறுகையில் "ஜவுளி துறையில் ஏற்பட்டுள்ள மந்தநிலையால் குறைவான விசைத்தறிகளே தற்பொழுது இயங்கி வருகிறது. 

இந்த நிலையில்  பாவு நூல் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளதால் விசைத்தறி துணி உற்பத்தி மேலும் குறைக்க கூடும்.

இதன் காரணமாக பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து மாற்று தொழிலுக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பஞ்சு, நூல் விலை ஏற்றம், மின் கட்டண உயர்வு போன்றவற்றால் விசைத்தறி தொழில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து நிலையை சரி செய்ய வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Power loom Workers lost jobs due to recession in textile industry


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->