சென்னையில் பரபரப்பு!! தலைமைச் செயலகத்தில் குவிக்கப்பட்ட போலீஸார்!! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை வல்லூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 1,000க்கும் மேற்பட்டோர் பணி நிரந்தரம் கோரி இன்று தலைமை செயலகத்தை முற்றுகையிட உள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன் அடிப்படையில் தலைமைச் செயலகத்தின் நுழைவுவாயில், நேப்பியர் பாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற போது இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை செய்ய வலியுறுத்தி தலைமை செயலகத்தை முற்றுகையிட இஸ்லாமிய அமைப்பினர் முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police swarmed in Chennai TNassembly headquarters


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->