பைனான்சியரை கொலை செய்ய முயன்ற மர்ம கும்பலுக்கு வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


பைனான்சியரை கொலை செய முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பாணாதுறை பத்துகட்டு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அந்த பகுதியில் வட்டி தொழில் செய்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே நின்று பேசி கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.  இதில், படுகாயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கதினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police searching the gang who attempt murder a man


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->