லஞ்ச பணத்தை வாயில் போட்டு மென்ற போலீசார் - நடந்தது என்ன?
police officer arrested for bribe in namakkal
லஞ்ச பணத்தை வாயில் போட்டு மென்ற போலீசார் - நடந்தது என்ன?
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் இருசக்கர வாகனத்தில் ஈரோடு வந்த போது, எழுபது வயது மூதாட்டி மீது மோதியது. இதில் மூதாட்டிக்கு லேசான காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பிறகு வீடு திரும்பினார்.
இந்த நிலையில், ஈரோடு அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் இருந்து பிரகாஷைத் தொடர்பு கொண்ட உதவி காவல் ஆய்வாளர் செல்வகுமார் என்பவர் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் உடனடியாக நேரில் வரும்படியும் அழைத்துள்ளார்.

மேலும், கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்கு இரண்டு ஜாமீன்தாரர்கள் மற்றும் ஜாமீன் தொகையாக ரூபாய் 10 ஆயிரம் கொண்டு வருமாறு தெரிவித்தார். போலீசார் தெரிவித்தது போல் பிரகாஷ் வந்ததால், காவல்நிலைய நடைமுறைகளுக்கு பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால், போலீசார் பிரகாஷின் இருசக்கர வாகனத்தை விடுவிக்கவில்லை.
அதற்கும், 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனை விரும்பாத பிரகாஷ் சம்பவம் குறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீஸில் புகார் அளித்தார். அதன் படி, போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை பிரகாஷிடம் கொடுத்து அனுப்பினார்.
இதையடுத்து பிரகாஷ் அந்த பணத்தை காவல் ஆய்வாளர் செல்வகுமாரிடம் கொடுத்துள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீஸாரை பார்த்த செல்வகுமார் வாங்கிய பணத்தை உடனடியாக வாயில் போட்டு மென்று மறைக்க முயன்றார். இருப்பினும், லஞ்ச ஒழிப்பு போலீஸார் செல்வகுமாரை அதிரடியாக கைது செய்து பணத்தை மீட்டனர்.
English Summary
police officer arrested for bribe in namakkal