கடலூரில் அதிர்ச்சி.! 14 வயது சிறுமி அறையில் கட்டிப்போட்டு பலாத்காரம்.! வாலிபருக்கு வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமியை அறையில் கட்டிப் போட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் பாட்டி வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சிறுமியிடம் படிப்பதற்காக புத்தகம் எடுத்து கொண்டு தனது வீட்டிற்கு வர அழைத்துள்ளார். இதையடுத்து சிறுமி புத்தகம் எடுத்துக்கொண்டு வாலிபர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்பொழுது வாலிபர் சிறுமியை அறையில் கட்டி வைத்து பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து வீட்டிற்கு வந்த சிறுமி அழுது கொண்டே இதுகுறித்து பாட்டியிடம் கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பாட்டி, சிகிச்சைக்காக சிறுமியை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். 

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிறுமியிடம் புகார் பெற்ற போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையறிந்த வாலிபர் தலைமறைவானார். இதைத்தொடர்ந்து தலைமறைவான வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police looking for youth due to Rape a 14 year old girl in Cuddalore


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->